பிக்ஹ் (இஸ்லாமிய சட்டப்) பகுதி

பதில் : 'அத்தஹாரா' என்பது தொடக்கை நீக்கி, அழுக்கை அகற்றுதல் என்பதாகும்.
அழுக்கை அகற்றி துய்மைப்படுத்தல் என்பது ஒரு முஸ்லிம் தனது மேனியில் அல்லது ஆடையில் அல்லது தரையில் மற்றும் அவன்தொழுமிடத்தில் ஏற்பட்ட நஜிஸை –அழுக்கு அசுத்தம் போன்றவற்றை –அகற்றுவதாகும்.
தொடக்கிலிருந்து தூய்மைபெறுதல் (தொடக்கை நீக்குதல்) என்பது பரிசுத்தமான நீரினால் வுழு செய்தல், மற்றும் குளித்தல். நீர் கிடைக்காவிட்டால் அல்லது நீரைப் பயண்படுத்துவது சிரமமாக இருப்பின் தயம்மும் செய்வதன் மூலம் தொடக்கிலிருந்து விடுபடுவதைக் குறிக்கும் (தொடக்கு என்பது மனிதன் தனது உடலில் உணரக் கூடிய,உடலிருந்து வெளியாகக்கூடிய அசுத்தமானவைகளைக் குறிக்கும். இதிலிருந்து தூய்மை பெற குளித்தல் வுழு செய்தல் அல்லது தயம்மும் செய்தல் போன்ற விடயங்களை அசுத்ததின் நிலைக்கேட்ப மேற்கொள்ளுதல் வேண்டும்) (பெயர்பாளர்).

பதில் : அதனை சுத்தமாகும் வரை தண்ணீரால் கழுவவேண்டும்.
நாய் (வாய்விட்ட) நக்கிய பாத்திரங்களைப் பொருத்தவரை ஏழு தடவைகள் கழுவ வேண்டும், அதில் முதலாவது தடவை கழுவும் போது மண்ணைப் பயண்படுத்தல் வேண்டும்.

பதில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் அல்லது இறைநம்பிக்கை கொண்ட அடியார் வுழு செய்யும்போது முகத்தைக் கழுவினால், இரு கண்களால் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.
அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக வெளியேறுகிறார்". [இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

பதில் : இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்.
மூன்று தடவைகள் நாசுக்கு நீர் செலுத்தி, நன்றாக சீரி வாய் கொப்பளித்தல்.
வாய்க்கொப்பளித்தல் என்பது நீரை வாய்க்குள் செலுத்தி அதனை நன்கு அலசி வெளியேற்றல்,
இஷ்தின்ஷாக் என்பது வலது கையால் நீரை மூக்கினுள் செலுத்தி நன்கு உள்ளிழுப்பதைக் குறிக்கும்.
அல் இஸ்தின்ஸார் என்பது மூக்கின் உள்ளே உற்செலுத்திய நீரை இடது கையால் வெளியேற்றுவதைக் குறிக்கும்.
பின்னர் முககத்தை மூன்று முறை கழுவுதல்.
பின்னர் இரு கைகளையும் இரு முழங்கை உட்பட மூன்று முறை கழுவுதல்
பிறகு உனது இரண்டு கைகளையும் முன் தலையிருந்து ஆரம்பித்து பிற்பகுதிவரை கொண்டு சென்று தலை முழுவதைiயும் மஸ்ஹு (நீரால் தடவுதல்) செய்வதோடு இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்தல்.
பின்னர் உனது இருகால்களையும் கரண்டை உட்பட மூன்று முறை கழுவுதல் வேண்டும்.
இதுதான் வுழு செய்வதன் முழுமையான முறையாகும். இது தொடர்பான ஹதீஸ்கள் புஹாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. அவைகளை உஸ்மான் (ரழி) மற்றும் அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) போன்றோரும் ஏனைய ஸஹாபாக்களும் அறிவித்துள்ளனர். நபி (ஸல்) வுழுவை ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் செய்வார்கள் என்றும் புஹாரி மற்றும் ஏனைய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. அதாவது நபி (ஸல்) வுழுவின் உறுப்புகளை ஒரு தடவை அல்லது இரு தடவைகள் கழுவுவார்கள் என்பதே இதன் கருத்தாகும்.

பதில் : வுழுவின் பர்ளுகள் என்பது : வுழுவின் போது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றை ஒரு முஸ்லிம் செய்யாது விட்டால் வுழு நிறைவேறாது என்றிருக்கும் காரியங்களைக் குறிக்கும். அவை பின்வருமாறு :
1- முகத்தைக் கழுவுதல். அதில் வாய்கொப்பளித்தல், நாசுக்கு நீர் செலுத்தல் போன்றவை அடங்கும்.
2- இரு கைகளையும் இரு முழங்கைகள் உட்படக் கழுவுதல்.
3- இரு காதுகள் உட்பட தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்.
4- கரண்டை- கணுக்கால் - உட்பட இரு கால்களையும் கழுவுதல்.
5- உறுப்புகளை கழுவுவதில் ஒழுங்கை கடைப்பித்தல். அதாவது முகத்தைக் கழுவுதல், பின்னர் இரு கைகளையும் கழுவுதல், பின்னர் தலையை மஸ்ஹு செய்தல், பின்னர் இரு கால்களையும் கழுவுதல்.
6- தொடராகச் செய்தல், அதாவது வுழுவின்போது கழுவிய உறுப்பு காய முன் மற்றைய உறுப்பை கால இடை வெளியின்றி கழுவ வேண்டும்.
அதாவது வுழுவின் போது கழுவ வேண்டிய உறுப்புகளிள் சிலதை ஒரு நேரத்திலும் எஞ்சியவற்றை இன்னொரு நேரத்திலும் கழுவுவதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அவ்வாறு செய்தால் ஒருவரின் வுழு நிறைவேறாது.

பதில் : வுழுவின் ஸுன்னத்துகள் என்பது அவற்றை ஒருவர் வுழுவின் போது செய்தால் அதற்கு அதிக கூலியும் நன்மையும் கிடைக்கும். அவற்றை செய்யாது விட்டால் அவர் மீது எவ்விதக் குற்றமுமில்லை. அவரின் வுழு நிறைவேறிவிடும். அவை பின்வருமாறு :
1- பிஸ்மில்லாஹ் கூறுதல்.
2- பல் துலக்குதல்.
3- இருகைகளையும் மணிக்கட்டுவரை கழுவுதல்.
4- கை,கால் விரல்களை குடைந்து கழுவுதல்.
5- உறுப்புக்களை இரண்டு முறை அல்லது மூன்று முறை கழுவதல்.
6- வலது புறத்திலிருந்து ஆரம்பித்தல்.
7-வுழு செய்த பின் பின்வரும் திக்ரை-துஆவை- ஓதுதல் : “அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன்; அவனுக்கு யாளனில்லை என்றும்;.மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனின் அடியாரும் துதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன்.
8- வுழுவின் பின் இரண்டு ரக்அத்துக்களை தொழுதல் (வுழுவின் ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களை தொழுதல்)

பதில் : 1- முன் பின் துவரத்தினால் சிறுநீர் அல்லது மலம் அல்லது காற்று வெளியாகுதல்.
2- (ஆழ்ந்த) தூக்கம் அல்லது பைத்தியம் அல்லது மயக்கம் ஏற்படுதல்.
3- ஒட்டக இறைச்சி சாப்பிடுல்.
4- முன் பின் துவாரங்களை கையால் திரையின்றி தொடுதல்.

பதில் : தயம்மும் என்பது நீர் இல்லாத போது அல்லது நீரைப்-பயன்படுத்துவது- உபயோகிப்பது சிரமமானது என்ற நிலையில் இருக்கும் போது மண்ணைப் பயண்படுத்துவதைக் குறிக்கும்.

பதில் : இரு உள்ளங்கைகளையும் ஒரு தடவை மண்ணில் அழுத்தி, முகத்தையும் இரு முன்னங்கைகளையும் ஒரு முறை (மஸ்ஹு) தடவிக்கொள்வதாகும்.

பதில் : 1- வுழுவை முறிக்கும் அனைத்துக் காரியங்களும் தயம்முமை முறிக்கும் காரியங்களாகும்.
2- அத்தோடு நீர் கிடைத்தாலும் தயம்மும் முறிந்து விடும்.

பதில் : தோளினாலான காலில் அணியப்படுகின்றவை ஹுப் என்று அழைக்கப்படும்.
ஜவ்ரப்' என்பது காலில் அணிவதற்கு தோள் அல்லாதவற்றால் செய்யப்பட்ட காலுரையாகும்.
கால்களை கழுவுவதற்குப் பதிலாக இவ்விரண்டின் மீது மஸ்ஹு செய்வதை மார்க்கம் அனுமதித்துள்ளது.

பதில் : குறிப்பாக மாரி, குளிர் காலங்களிலும் பயணத்தின் போதும் காலணிகள் காலுறைகள் போன்றவற்றை கலற்றுவது சிரமம் என்பதனால் இலகுபடுத்தி சிரமங்களை குறைப்பதுதான் ஹுப்பின் பிரதான நோக்கமாகும்.

பதில் : 1- ஹுப்பை (காலணிகளை) வுழு செய்ததன் பின் அணிந்திருத்தல் வேண்டும்.
2- ஹுப் (காலணி) துய்மையானதாக இருத்தல் வேண்டும். அசுத்தமான பாதணி மீது மஸ்ஹு செய்வது அனுமதிக்கப் பட்டதல்ல.
3- ஹுப்பானது வுழுவின் போது காலில் கட்டாயம் கழுவப்பட வேண்டிய பகுதியை மறைத்து இருத்தல் வேண்டும்.
4- மஸ்ஹு செய்வது, அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் இருக்க வேண்டும். அதாவது ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாட்களுக்கும் ஆகும்.

பதில் : நனைந்த இரு கைவிரல்களையும் கால்விரல்களின் மீது வைத்து கெண்டைக்கால் வரை தடவுதல், மேலும் வலது காலை வலது கையினாலும் இடது காலை இடது கையினாலும் தடவுதல். மஸ்ஹு செய்யும் போது கை விரல்களை இடைவெளிவிட்டு அகற்றி வைப்பதுடன் பல தடவைகள் செய்வது அனுமதிக்கப்டட்டதல்ல.

பதில் : 1- மஸ்ஹு செய்வதற்கான காலம் முடிவடைதல். இஸ்லாமிய ஷரீஆ வரையறுத்த மஸ்ஹுக்கான கால எல்லையான ஊர்வாசிக்கு ஒரு நாளும் பிரயாணிக்கு மூன்று நாள் என்பது முடிவடைதல்.
2- காலணிகளை கழற்றுதல்: ஒருவர் மஸ்ஹு செய்ததன் பின் தனது (ஹுப்) காலணியின் ஒன்றை அல்லது இரண்டையும் கழற்றினால் அவரின் மஸ்ஹ் முறிந்து விடும்.

பதில்: தொழுகையென்பது குறிப்பிட்ட வார்த்தைகள், செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வை வணங்குவதாகும். இவ்வணக்கமானது தக்பீர் கூறி ஆரம்பிக்கப்பட்டு ஸலாமுடன் முடிவடையும்.

பதில் : தொழுகை ஒவ்வொரு முஸ்லிமின்; மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நிசயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரங்குறிப்பிடப்பட்ட கடமையாக உள்ளது". (ஸூறதுன்னிஸா :103)

பதில் : தொழுகையை விட்டுவிடுவது குப்ராகும் (இறைநிராகரிப்பாகும்). நபி (ஸல்) இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்கள் :
"எமக்கும் அவர்களுக்கும் (இறை மறுப்பாளர்களுக்கும்) இடையிலான ஒப்பந்தம் - உடன்படிக்கை – தொழுகையாகும். எனவே அதனை யார் விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்".
இந்த ஹதீஸை அஹ்மத், திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.

பதில் : ஐந்து நேரத் தொழுகைகள் ஆகும். ஒவ்வொரு தொழுகையினதும் ரக்அத்துக்களின் எண்ணிக்கை விபரம் : ஸுப்ஹ் தொழுகை இரண்டு ரக்அத்துக்கள், லுஹர் தொழுகை நான்கு ரக்அத்துக்கள், அஸ்ர் தொழுகை நான்கு ரக்அத்துக்கள், மஃரிப் தொழுகை மூன்று ரக்அத்துக்கள், இஷாத் தொழுகை நான்கு ரக்அத்துக்கள் ஆகும்.

பதில் : 1- முஸ்லிமாக இருத்தல், காபிரின் தொழுகை நிறை வேற மாட்டாது.
2- புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல் பைத்தியகாரனின் தொழுகை நிறைவேறமாட்டாது.
3- நல்லதையும் கெட்டததையும் பிரித்தறிந்து விளங்கும் பருவத்தை அடைந்திருத்தல். அதனடிப்படையில் பிரித்தறியும் பருவத்தை அடையாத சிறுவரின் தொழுகை நிறைவேற மாட்டாது.
4- நிய்யத் வைத்தல் (மனதால் நினைத்தல்)
5- தொழுகைக்குரிய நேரத்தை அடைந்திருத்தல்.
6- தொடக்கை விட்டும் நீங்கி சுத்தமாய் இருத்தல்.
7- நஜிஸை விட்டும் சுத்தமாயிருத்தல்.
8- உடலில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியை மறைத்தல்.
9- கிப்லாவை முன்னோக்குதல்.

பதில் : தொழுகையின் (பர்ளுகள் ) 14 ஆகும். அவை பின்வருமாறு :
1- பர்ளான தொழுகையில் நின்று தொழ சக்தியுள்ளவர் நின்று தொழுதல்.
2- இஹ்ராம் தக்பீர், அதாவது அல்லாஹு அக்பர் எனக் கூறல்.
3- சூறா அல் பாத்திஹாவை ஓதுதல்.
4- ருகூஊ செய்தல். (குணிதல்) அதாவது முதுகை வலைத்து நேராக தலையை முதுகு மட்டத்திற்கு சமமாக முன்னோக்கி வைத்தல்.
5- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு வருதல்.
6- இஃதிலாலில் நேராக நிற்றல். (ருகூவிற்குப்பின் நிலையாக நிற்றல்).
7- ஸுஜூத் செய்தல்: ஸுஜூதின் போது நெற்றி மற்றும் மூக்கு இரு உள்ளங்கைகள் முட்டுக்கால்கள் இரு கால் விரல்களின் உட்பகுதிகள் போன்றவை தரையில் படும் நிலையில் இருத்தல் வேண்டும்.
8- ஸுஜூதிலிருந்து இருப்புக்கு வருதல்.
9- இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல்.
வலது காலை நட்டி இடது காலை விரித்து அதன் மீது அமர்வதோடு அதனை கிப்லாவை நோக்கி வைப்பதும் ஸுன்னாவாகும்.
10- அனைத்து செயல் சார்ந்த பர்ளுகளிலும் தாமதித்திருத்தல்.
11- இறுதி அத்தஹிய்யாத்து
12-அதற்காக அமர்தல்.
13- ஸலாம் கூறுதல். அதாவது இரண்டு முறை 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறுதல்.
14- இங்கு விபரிக்கப்பட்ட பர்ளுகளை (ருகுன்களை) சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிரமமாகச் செய்தல். உதாரணத்திற்கு ஒருவர் ருகூஉ செய்வதற்கு முன் ஸுஜுத் செய்தால் அவரின் தொழுகை வீணாகி விடும். மறந்து செய்தால் மீண்டும் எழுந்து ருகூ செய்து விட்டு பின்னர் ஸுஜூத் செய்தல் வேண்டும்.

பதில் : தொழுகையின் வாஜிப்கள் எட்டாகும். அவையாவன:
1- இஹ்ராம் தக்பீர் தவிர்ந்த ஏனைய தக்பீர்கள்.
2- இமாமும் தனித்து தொழுபவரும் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஃ' என்று கூறுதல்.
3- 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுதல்.
4- ருகூவில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' என்று கூறுதல்.
5- ஸுஜுதில் ஒரு தடவை 'ஸுப்ஹான ரப்பியல் அஃலா' என்று கூறுதல்.
6- இரு ஸஜ்தாக்களுக்குமிடையில் ' ரப்பிஃபிர்லி ' என்று கூறுதல்.
7- முதலாவது அத்தஹிய்யாத்.
8- முதலாவது அத்தஹிய்யாத்திற்காக அமர்தல்.

பதில் : அவை 11 ஆகும். அவைகள் பின்வருமாறு :
1-இஹ்ராம் தக்பீருக்குப்பின் ' ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா இலாஹ கய்ருக' எனக் கூறுவது. இது துஆ அல் இஸ்திப்தாஹ் என்றழைக்கப்படுகிறது. பொருள் ( யா அல்லாஹ் உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேர் மிக்கது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.).
2- இஸ்திஆதா கூறுதல் (அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்) என்று கூறுதல்.
3- பிஸ்மில்லாஹ் கூறுதல் ( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்).
4- ஆமின் கூறுதல்.
5- ஸூறா பாத்திஹாவை ஒதி முடிந்ததும் ஏதாவது ஒரு ஸூறாவை ஓதுதல்.
6- சப்தமாக ஒதித் தொழும் தொழுகையில் இமாம் சப்தமாக ஓதுதல்.
7- "ரப்பனா வலகல் ஹம்து" என்ற வார்த்தைக்குப்பின் "மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின ஷைஇன் பஃது" என்று கூறுதல்.
8- ருகூவில் ஒதும் தஸ்பீஹை ஒரு தடவைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
9- ஸுஜூதின் தஸ்பீஹை ஒரு முறைக்கு மேல் அதிகமாக கூறுதல்.
10- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்திருக்கும் போது கூறும் 'ரப்பிஃபிர்லி' என்ற துஆவை ஒரு தடவைக்கும் மேல் அதிகமாக கூறுதல்.
11- இறுதி அத்தஹிய்யாத்தில் ஸலவாத் சொல்வதும் அதனைத் தொடர்ந்து துஆ இறைஞ்சுவதும்.
நான்காவது :
செயல்ரீதியான ஸுன்னத்துக்கள் :
1- இஹ்ராம் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துதல்.
2- ருகூவிற்கு செல்லும் போதும்.
3- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு செல்லும் போதும் இரு கைகளையும் உயர்த்துதல்.
4- அதன் பின் இரு கைகளையும் கீழே விட்டுவிடுதல்.
5- வலது கையை இடது கையின் மீது வைத்தல்.
6- ஸுஜூத் செய்யும் இடத்தைப் பார்த்தல்
7- நின்ற நிலையில் இருக்கும் போது இரு கால்களுக்கு மிடையில் இடைவெளிவிடுதல்.
8- ருகூவில் இருக்கும் போது இரு முழங்கால்களையும் இரண்டு கைகளினால் விரல்களை விரித்த நிலையில் பிடித்தல். முதுகை நேராக வைத்து தலையை அதற்கு நேராக வைத்தல்.
9- ஸுஜூதின் போது தரையில் கட்டாயம் பட வேண்டிய உறுப்புகளை தரையில் படுமாறு வைத்தல்.
10- ஸுஜூத் செய்யும் போது (மேற் கைகளை (மேற்கை (Arm) என்பது தோள் பட்டைக்கும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்) விலாவை விட்டும் தூரமாக வைத்தல், வயிற்றை இரு தொடைகளை விட்டும் தூரப்படுத்துதல், தொடையை இரு கெண்டை கால்களை விட்டும் தூரப்படுத்தல், முட்டுக்கால்களை அகற்றி வைத்தல், பாதங்களை நிமிர்த்தி நட்டிவைத்தல், இரு கால் விரல்களின் உட்புறத்தை தரையில் பிரித்து வைத்தல், இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக விரிக்கப்படட்டதாகவும் விரல்களை சேர்த்தும் வைத்தல்.
11- இரு ஸஜ்தாக்கிடையிலான இருப்பிலும் முதல் அத்தஹிய்யாத் இருப்பிலும் இப்திராஷ் இருப்பு இருத்தல். இரண்டாவது அத்தஹிய்யாத்தில் தவர்ருக் இருப்பு இருத்தல். (குறிப்பு) இப்திராஷ் இருப்பு என்பது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைத்தல். தவர்ருக் இருப்பு என்பது தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைத்தல்). (மொழிபெயர்ப்பாளர்).
12- இரு ஸஜ்தாக்கிடையிலான இருப்பில் இரு தொடைகளின் மேல் இருகைகளையும் விரித்து கைவிரல்களை சேர்த்தும் வைத்தல். அவ்வாறே அத்தஹிய்யாத்திலும் வைக்க வேண்டும். என்றாலும் வலது கையின் சின்ன விரலையும் மோதிர விரலையும் மடித்து நடுவிரலை பெரும் விரலோடு சேர்த்து வட்டமாக்கி அல்லாஹ்வின் பெயர் கூறும்போது ஆள்காட்டி விரலால் சைக்கினை செய்தல் வேண்டும்.
13- (தொழுகையை முடிப்பதற்கு ஸலாம் கூறும் போது) முதலாவது ஸலாமில் தலையை வலப்பக்கமாகவும் இரண்டாவது ஸலாமில் இடப்பக்கமாகவும் திருப்புதல்.

பதில் : 1- தொழுகையின் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை அல்லது -பர்ளுகளிள் ஏதாவது ஒன்றை விட்டு விடுதல்.
2- வேண்டுமென்றே தொழுகையில் பேசுதல் (கதைத்தல்).
3- சாப்பிடுதல் அல்லது குடித்தல்.
4- தொடரான அதிக அசைவுகள்.
5- வேண்டுமென்றே தொiழுகையின் வாஜிப்களில் ஒன்றை விடுதல்.

பதில் : தொழும் முறை (ஒரு முஸ்லிம் பின்வரும் ஒழுங்கில் தொழுகையை நிறைவோற்றுவான்) :
1- கிப்லா என்னும் கஃபா ஆலயத்தை தனது முழு உடலினாலும் நேராக நின்று முன்னோக்க வேண்டும்.
2- பின்னர் தொழவிரும்பும் தொழுகையை நாவினால் மொழியாமல் மனதில் நினைக்க வேண்டும்.
3- பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி தக்பீர் கூறும்போது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்த வேண்டும்.
4- வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.
5- பிறகு பின்வரும் பிராத்தனைகளில் (துஆக்களில்) ஒன்றை ஆரம்பமாக ஓதவேண்டும். அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும்மக்ஸில்னீ மின் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத்' பொருள் :
யாஅல்லாஹ்! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!.
அல்லது:
'ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா இலாஹ கைருக'. (பொருள் : யா அல்லாஹ்! உன்னை புகழ்ந்து, நீ மிகவும் பரிசுத்தமானவன் எனத் துதிசெய்கிறேன். உனது பெயர் சுபிட்சம் வாய்ந்ததும் அருட்பேறு உடையதுமாகும். உனது புகழ் (பெருமை) மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.)
6- பின்னர் இஸ்திஆதா ஓதுவார் அதாவது : அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். (எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்) 7- பிறகு பிஸ்மிலுடன் ஃபாத்திஹா ஸூராவை ஓதவேண்டும். அது பின்வருமாறு : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)). அல்ஹ்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்). அர்ரஹ்மானிர் ரஹீம். (அவன் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாவான்). மாலிகி யவ்மித்தீன். (தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே)). இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (நாங்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.) இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். (நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!). ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலழ் ழால்லீன். ((அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.) (பாதிஹா : 1 - 7).
பிறகு (ஆமீன்) என கூறுவார். ஆமீன் என்பதன் கருத்து (யாஅல்லாஹ் எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக) என்பதாகும்.
8- பிறகு அல் குர்ஆனில் அவருக்கு முடியுமான சில வசனங்களை ஓத வேண்டும். மேலும் ஸுப்ஹ் தொழுகையில் (சற்று) அதிகமாக ஓதுவார்.
9- பிறகு அவர் ருகூஃ செய்வார். அதாவது அல்லாஹ்வை மகிமைப்படுத்தும் முகமாக அவர் முதுகை வளைத்து குனிவார். இவ்வாறு ருகூ செய்யும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி தனது இரு கைகளையும் தோள்பட்டைக்கு நேராக உயர்த்துவார். முதுகை வளைத்து தலையை நேராக முதுகின் மட்டத்திற்கு சமமாக வைப்பார். இரண்டு கைகளையும்- விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களின் மீது வைப்பார்.
10- ருகூவில் 'ஸுப்ஹான ரப்பியல் அழீம்' (பொருள்: மகத்தான எனது இரட்சகனை நான் தூய்மைப்படுத்துகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறுவார். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ'. (பொருள் : யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னைப் புகழ்வதுடன் நீ தூய்மையானவன் என்றும் போற்றுகிறேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!.
11- 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' (பொருள் : தன்னைப் புகழ்பவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்து அங்கீகரித்தான்) என்று கூறியவாறு ருகூவிலிருந்து எழும்புவார். அந் நேரம் இரு கைகளையும் புயத்திற்கு நேராக உயர்த்தி 'ரப்பனா வலகல்ஹம்து' என்று கூறுவார். ஜமாஅத்தாக தொழும் மஃமூம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' என்று கூறாது அதற்குப் பதிலாக 'ரப்பனா வலகல் ஹம்து' (பொருள்: எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்று கூறுவார். குறிப்பு : தனித்துத் தொழுபவர் ருகூவிலிருந்து எழும்பும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஃ' கூறுவதுடன் அதனைத் தொடர்ந்து 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூற வேண்டும்.
12- ருகூவிலிருந்து எழுந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து மில்அஸ்ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷி.ஃத மின் ஷைஇன் பஃத்' என்று கூறுவார். (பொருள் : எங்கள் இரட்சகனே, புகழ் அனைத்தும் உனக்கே உரியன வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும் நிரம்புமளவிற்கும் மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு (உனக்கே புகழனைத்தும்)).
13- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி முதலாவது ஸஜ்தா செய்வார். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜூது செய்வார். கைகளை விலாவோடு சேர்த்து வைக்கவோ முழங்கைகளை தரையில் படுமாறு வைக்கவோ கூடாது. அவரின் கைவிரல்கள் கிப்லா திசையை நோக்கியதாக வைக்க வேண்டும்.
14- 'ஸுஜூதில் ஸுப்ஹான ரப்பியல் அஃலா' (பொருள்: மிக உயர்ந்தவனாகிய என் இரட்சகனை துதிசெய்கிறேன்) என்று மூன்று முறை கூறவேண்டும். மேலும் இந்த தஸ்பீஹுடன் 'ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பன வபிஹம்திக அல்லாஹும்ம ஃபிர்லீ' (பொருள் :யாஅல்லாஹ் என் இரட்சகனே! உன்னை புகழ்வதுடன் நீ தூய்மையானவன் எனவும் துதிக்கின்றேன். யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக!) என்ற துஆவை மேலதிகமாக ஓதுவது சிறந்ததாகும்!
15- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்துவார்
16- பின்னர் இரண்டு ஸஜ்தாவுக்குமிடையில் வலது காலை நட்டி இடது காலை மடித்து அதன் மீது அமர்வார். வலது கையை வலது பக்க தெடையின் மீது முழங்காலின் ஒரத்தில் வைத்து வலது கையின் சின்ன விரலையும் மோதிர விரலையும் மடித்து ஆள்காட்டி விரலை உயர்த்தி, பிரார்த்தனை செய்யும் போது அதை அசைப்பார், மேலும் கட்டைவிரலின் நுனியை நடுவிரல் நுனியுடன் இணைத்து வட்டம் போல் ஆக்கிக்கொள்வார், அத்துடன்; அவர் தனது இடது கையை தனது இடது தொடையின் மீது விரல்களை விரித்த நிலையில் நீட்டி முழங்கால் ஓரத்தில் வைப்பார்.
17- இரண்டு ஸஜ்தாவுக்கு இடையில் அமர்ந்து பின்வரும் துஆவை ஓதுவார் : ரப்பிஃபிர்லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ, வஜ்புர்னீ, வஆபினீ' (பொருள் : யா அல்லாஹ் ! என்னை மன்னித்து எனக்கு அருள்புரிந்து நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை தருவாயாக! என்குறைகளை மறைத்து எனக்கு ஆறுதலைத் தந்திடுவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக!).
18- பிறகு முதல் ஸஜ்தா செய்தது போன்று இரண்டாவது ஸஜ்தாவை அல்லாஹு அக்பர் என்று கூறி முதலில் சொன்னது, செய்ததைப்போன்று மீண்டும் செய்வார். (இத்துனுடன் முதல் ரக்அத் முடிந்துவிடும்)
19- பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு எழுந்து, மீண்டும் நிலைக்கு வருவார். இரண்டாவது ரக்அத்தை முதல் ரக்அத்தைப் போன்றே தொழுவார். எனினும் இதில் ஃபாத்திஹா ஸூராவுக்கு முன்னுள்ள துஆஉல் இஸ்திப்தாஹ் பிராத்தனையை மீண்டும் ஓதமாட்டார்.
20- இரண்டாவது ரக்அத் முடிந்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு இரண்டு ஸஜ்தாவிற்கும் இடையில் அமர்ந்தது போன்று அமர்வார்.
21- இந்த அமர்வில் அத்தஹிய்யாத் எனும் பின்வரும் பிரார்த்தனையை ஓதுவார் : அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹந் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ'. (அதனைத் தொடர்ந்து பின்வரும் ஸலவாத்தை ஓதுவார்) 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத் - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். (இதன் பிறகு பின்வரும் துஆவை ஓதுவார்). அஊது பில்லாஹி மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி வமின் பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்' . (பொருள் : காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சான்று பகர்கிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் சான்று பகர்கிறேன். யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள் மீதும் அருள் புரிந்தது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர்; மீதும் அருள்புரிவாயாக. யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும்,செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும செழிப்பையும் பொழிவாயாக !நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையில் இருந்தும் நரகத்தின் வேதனையில் இருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்). இதன் பிறகு இம்மை மறுமைக்குரிய நலன்களில் தான் விரும்பியதை தனது இரட்சகனிடம் வேண்டிப் பிரார்த்திப்பார்.
22- பிறகு வலது புறம் முகத்தைத் திருப்பி "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறுவார்;. பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே கூறுவார் (இத்துடன் இரண்டு ரக்அத் தொழுகை முடிவடைகிறது.)
23- மூன்று அல்லது நான்கு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகைகளைத் தொழும்போது முதலாவது அத்தஹியாத்தில் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ' என்ற வார்த்தை வரை ஒதி நிறுத்திக்கொள்வார்;
24- பிறகு அல்லாஹு அக்பர் எனக் கூறி நிலைக்கு வர வேண்டும். அப்போது இரு கைகளையும் தோள் புயத்திற்கு நேராக உயர்த்த வேண்டும்.
25- எஞ்சிய ரக்அத்துக்களை இரண்டாம் ரக்அத்தை தொழுத முறையில் தொழ வேண்டும். அதில் ஸூறதுல் பாத்திஹாவை மாத்திரம் ஓதிக் கொள்வார்.
26- பிறகு 'தவர்ருக்' முறையில் அமர்வார். அதாவது வலது காலை நட்டி வைத்து, இடது காலை வலது காலுக்கு கீழ் வெளிப்படுத்தி தமது இருப்பிடத்தை (பித்தட்டை) தரையில் வைத்து அமர்ந்து கொள்வதே 'தவர்ருக்' முறையாகும். பின்னர் தனது இரு கைகளையும் முதலாவது அத்தஹிய்யாத்தில் தொடையின் மீது வைத்த முறையில் வைக்க வேண்டும்.
27- இந்த இருப்பில் அத்தஹிய்யாத் முழுவதையும் (துஆக்களுடன்) ஓதுவார்.
28- பிறகு வலது புறம் (முகத்தைத் திருப்பி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறுவார். பிறகு இடது புறம் முகத்தைத் திருப்பி அது போன்றே ஸலாம் கூறுவார்.

பதில்- 'அஸ்தஃபிருல்லாஹ்' என்று மூன்று முறை கூறுவார்.
அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம், வமின்கஸ் ஸலாம், தபாரக்த யாதல் ஜலாலி வல்இக்ராம்'. (பொருள்: இறைவா! நீயே சாந்தியுடைவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ மகத்துவமிக்கவனாய் உள்ளாய்.)
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹெளல வலாகுவ்வத இல்லாபில்லாஹ், அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத வலா முஃதிய லிமா மனஃத வலாயன்பஉ தல்ஜத்தி மின்கல் ஜத்து' (பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை, அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. எங்கள் இரட்சகனே! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவரும் இல்லை, நீ தடுப்பதைக் கொடுப்பவர் எவரும் இல்லை, மதிப்புடைய எவரும் எந்தப் பலனும் அளிக்க மாட்டார், மதிப்பு உன்னிடமே உள்ளது.)
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ்ஸனாஉல் ஹஸன் லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'.
(பொருள் :உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது. உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத்தவிர வேறு எவரையும் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் யாவும் அவனுக்கே உரியன. சிறப்பும் அவனுக்கே உரியது. அழகிய புகழும் பாராட்டும் அவனுக்கே உரியது. உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. காபிர்கள் வெறுத்த போதிலும் கீழ்படிதலை அவனுக்கே உரித்தாக்குகிறோம்.)
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத்தூயவன்) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும்,
அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியன) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும்,
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று (33) முப்பத்து மூன்று தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறிவிட்டு
(100) நூறாவதை பூரணப்படுத்துவதற்கு பின்வரும் திக்ரை ஓதுவார்: லாஇலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவன் தனித்தவன்; அவனுக்கு எந்த இணையாளருமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்).
மேலும், ஸுறதுல் இக்லாஸ் முஅவ்விதாத் (ஸூறதுல் பலக் ஸூறதுன் நாஸ்) ஆகிய ஸூறாக்களை ஸுப்ஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளின் பின் மூன்று தடவைகளும், ஏனைய தொழுகைகளின் பின் ஒரு தடவையும் ஓதுவார்.
மேலும், ஆயதுல் குர்ஸியை ஒரு தடவை ஓதுவார். 'அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம், லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம், லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி, மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல, வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' (பகரா 2:255). (பொருள் :(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்?(படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன்)

பதில் - ஸுப்ஹுக்கு முன்னர் (2) இரண்டு ரக்அத்துக்கள்
ழுஹருக்கு முன்னர் (4) நான்கு ரக்அத்துக்கள்.
ழுஹருக்குப் பின்னர் (2) நான்கு ரக்அத்துக்கள்.
மஃரிபுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்
இஷாவுக்குப் பின் (2) இரண்டு ரக்அத்துக்கள்
இதன் சிறப்பு : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தினமும் பர்ழ் அல்லாத சுன்னத்தான தொழுகைகள் (12) பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவந்தால் அவனுக்கு சுவனத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் அமைப்பான்'. இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதில் - ஜும்ஆத் தினமாகும் ( வெள்ளிக்கிழமையாகும்)
நபி (ஸல்) கூறினார்கள் : உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதப்படும். அந்நாளில் மக்கள் அதிர்ச்சிக்குள்ளவாகுவர்,.எனவே அந்நாளில் என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் உங்களது ஸலவாத்கள் எனக்கு காண்பிக்கப்படுகிறது'. அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மரணித்து உங்களின் எலும்பெல்லாம் மண்ணில் உக்கிப்போன நிலையில் எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி காண்பிக்கப்படுகிறது?! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்'. இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதில் - பருவ வயதை அடைந்த புத்திசாலியான ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம் ஆண்களுக்கும் கட்டாயக் கடமையாகும் (பர்ளு அய்ன்)
அல்லாஹ் கூறுகிறான் : "ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், கொடுக்கல் வாங்கலை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பால் விரைந்து செல்லுங்கள்- நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்". (ஸுறதுல் ஜுமுஆ : 9).

பதில் - ஜுமுஆத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டதாகும். அதில் இமாம் சப்தமிட்டு ஓதுவார். தொழுவதற்கு முன் இரண்டு குத்பாக்கள்- உரைகள்- உண்டு.

பதில் - ஷரீஆ ரீதியான நியாயமான காரணங்களுக்காகவேயன்றி எவ்விதத்திலும் ஜுமுஆத் தொழுகைக்கு சமூகம் தராது இருப்பது கூடாது. இது பற்றி நபி (ஸல்) பின்வருமாறு எச்சரிக்கை செய்துள்ளார்கள் : "யார் ஒருவர் அலட்சியமாக மூன்று ஜுமுஆக்களை விட்டு விடுகிறாறோ அல்லாஹ் அவரின் உள்ளத்திற்கு திரையிட்டு விடுவான்". இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதில் :
1- குளித்தல்.
2- வாசனை பூசுதல்.
3- இருப்பதில் மிக நல்ல ஆடைகளை அணிதல்.
4- பள்ளிக்கு ஆரம்ப நேரத்தில் செல்லுதல்.
5- நபி (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுதல்.
6- ஸுறதுல் கஹ்பை ஓதுதல்.
7- பள்ளிக்கு நடந்து செல்லுதல்.
8- துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்தை தேடுவதில் ஈடுபாடு காட்டல்.

பதில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : "ஜமாஅத்தாக -கூட்டாகத்- தொழுவது தனித்துத் தொழுவதை விட (27) இருபத்தேழு மடங்கு மேலானதாகும்". ஆதாரம் : முஸ்லிம்.

பதில்: தொழுகையில் உள்ளத்தின் ஈடுபாட்டையும் உடலுறுப்புக்கள் அதில் அடக்கமாக இருப்பதையும் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) வெற்றி பெற்றுவிட்டார்கள். அவர்கள் தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்". (ஸூறதுல் முஃமினூன் :1,2).

பதில் : ஸகாத் என்பது குறிப்பிட்ட செல்வத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்ட நேரத்தில்-காலத்தில்- நிறைவேற்றும் ஒரு கட்டாயக் கடமையாகும்.
இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் வசதியுள்ளோரிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கப்படும் கட்டாய தர்மமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"ஸகாத்தை நிறைவேற்றுங்கள்". (ஸூறதுல் பகரா :43).

பதில் : ஸகாத் தவிர்ந்த ஏனைய தர்மங்கள். அதாவது நல்ல காரியங்களுக்காக எந்த வேளையிலும் ஏதாவது ஒன்றை தர்மமாகக் கொடுத்தல்
அல்லாஹ் கூறுகின்றான் :
"அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யயுங்கள்". (ஸூறதுல் பகரா :195).

பதில் : நோன்பு நோற்றல் என்ற நிய்யத்துடன் பஜ்ர் உதயம் முதல் சூரியன் மறையும் வரையில் நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகும்.
அது இரு வகைப்படும் :

முதலாவது வகை : கடமையான நோன்பு : ரமழான் மாத நோன்பு இதற்கான உதாரணமாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"ஈமான் கொண்டோரே! நீங்கள் இறையச்சமுடையவர்களாக இருக்க உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது". (ஸூறதுல் பகரா :183)
இரண்டாவது வகை : ஸுன்னத்தான நோன்பு : வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு நோற்றல், அடுத்ததாக மாதாந்தம் மூன்று தினங்கள் நோன்பு நோற்பதாகும். அதில் மிகச்சிறப்புக்குரியது ஒவ்வொரு அரபு மாதத்திலும்; அய்யாமுல் பீழ் நாட்களான (13,14,15) ஆகிய தினங்களில் நோன்பு நோற்றல் போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.

பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் ரமழானில் யார் நோன்பு நோற்கிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்". (புஹாரி முஸ்லிம்)

பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "எந்த ஒரு அடியான் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறானோ அவனது முகத்தை நரகிலிருந்து எழுவது வருடங்கள் அல்லாஹ் தூரப்படுத்துகிறான்". (புஹாரி முஸ்லிம்)
ஹதீஸில் இடம்பெற்ற ((ஸப்ஈன கரீபன்)) என்பதன் கருத்து எழுவது வருடங்கள் என்பதாகும்.

பதில் : 1- வேண்டுமென்றே உண்ணுதல் பருகுதல்.
2- வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்.
3- இஸ்லாத்தை துறந்து செல்லல்.

பதில் : 1- நோன்பு துறப்பதை அவசரப்படுத்துதல்.
2- ஸஹர் செய்தல், அதனைப் பிற்படுத்துதல்.
3- நல்ல காரியங்கள் மற்றும் வணக்கங்களை அதிகரித்துக் கொள்ளல்.
4- ஒருவர்; ஏசினால் அவரைப் பார்த்து நான் ஒரு நோன்பாளி என்று கூறுதல்.
5- நோன்பு துறக்கும் நேரத்தில் துஆ ஓதுதல்.
6- கணிந்த பேரீத்தம் பழம் அல்லது காய்ந்த பேரீத்தம் பழத்தினால் நோன்பு துறத்தல். அது கிடைக்காது விட்டால் தண்ணீரால் நோன்பு துறத்தல்.

பதில் : ஹஜ் என்பது புனித ஆலயமான கஃபாவுக்கு குறிப்பிட்ட காலத்தில் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"மனிதர்களில் ஹஜ்ஜுக்கு சென்று வர சக்தி பெற்றுள்ளவர் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்". (ஸூறா ஆல இம்ரான் 97)

பதில் - 1- இஹ்ராம் (ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்தல்).
2- அரபாவில் தரித்தல்.
3- தவாபுல் இபாழா செய்தல் (ஹஜ்ஜின் கடமையான தவாப்).
4- ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்

பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : "உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று (பாவமற்றவராக) அவர் திரும்புவார்". இந்த ஹதீஸை புஹாரி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஹதீஸில் இடம்பெற்ற "அன்று பிறந்த பாலகன்" என்ற வாசகத்தின் கருத்து எவ்விதப்பாவமுமின்றி –புனிதராக –என்பதாகும்.

பதில் : உம்ரா என்பது புனித ஆலயமான கஃபாவுக்கு எந்த நேரத்திலும் சென்று குறிப்பிட்ட சில (செயற்பாடுகளை) கிரியைகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வணங்குவதைக் குறிக்கும்.

பதில் : 1- இஹ்ராம். அதாவது உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்காக நிய்யத்து வைத்தல்.
2- கஃபாவை தவாப் செய்தல்.
3- ஸஈ செய்தல். அதாவது ஸபா மர்வா குன்றுகளுக்கிடையில் சற்று விரைவாக நடத்தல்.

பதில் : இஸ்லாத்தை பரப்புதல், இஸ்லாத்தையும்; முஸ்லிம்களையும் பாதுகாத்தல், அல்லது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளுடன் போராடுதல் போன்ற செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளப்படும் அதீத முயற்சிகள் மற்றும் உழைப்புகளில் ஈடுபவதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"உங்கள் செல்வங்களாலும், உங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்". (ஸூறதுத் தவ்பா : 41).