இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் பற்றிய பகுதி

பதில் : 1- அல்லாஹ்வை உரிய முறையில் கண்ணியப்படுத்தல்.
2- இணையில்லாத அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிப்படுதல்.
3- அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அவனுக்குக்கட்டுபட்டு நடத்தல்.
4- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதை விட்டுவிடுதல்.
5 – எம்மீது சொரிந்துள்ள கருணை மற்றும் கணக்கிடமுடியாத அவனின் அருள்களுக்காக அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்துதல்.
6- அவனின் விதிகளை பொறுமையாக ஏற்று வாழ்தல்.

பதில் : 1- நபியவர்களை பின்பற்றுவதும் அவர்களை முன்மாதியாரியாக கொள்வதும்.
2- அவர்களின் கட்டளைகளை ஏற்று கட்டுப்பட்டு நடத்தல்.
3- அவர்களுக்கு மாறுசெய்யாது இருத்தல்.
4- அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்தல்.
5- அவர்களின் ஸுன்னாவுக்கு (வழிமுறைக்கு) அதிகமாக மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்காது இருத்தல்.
6- எமது உயிர் மற்றும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமாக அவர்களை நேசித்தல்.
7- அவர்களை கண்ணியப்படுத்துவதுடன், அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி அவற்றின் பால் அழைத்து உதவியாக இருத்தல்.

பதில் :1- பாவ காரியங்கள் தவிர்ந்த நல்ல காரியங்களில் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளல்.
2- பெற்றோருக்கு பணிவிடை செய்தல்.
3- பெற்றோருக்கு உதவுதல்.
4- பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுதல்.
5- பெற்றோருக்காக பிரார்த்தனை செய்தல்.
6- அவர்களுடன் உறவாடும் போது நல்ல முறையில் உறவாடுதல். மிகச்சாதாரன வார்த்தையாக கருதப்படுகின்ற 'சீ' என்ற வார்த்தையைக் கூட அவர்களுக்கு பாவிப்பதை தவிர்ந்து கொள்ளுதல்.
7- பெற்றோருடன் புன்சிரிப்போடு இருப்பதுடன் முகம் சுழித்து கடுகடுப்பாக இருக்கக் கூடாது.
8- பெற்றோரின் சப்தத்தைவிட எனது சப்தத்தை உயர்த்திப் பேசமாட்டேன், அவர்களின் பேச்சை காது தாழ்த்திக் கேட்பேன், அவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்யாது நடந்து கொள்வேன். அத்துடன் ஒரு போதும் அவர்களின் பெயர் கூறி அவர்களை அழைக்கமாட்டேன், அவர்களை எனது தந்தையே, எனது தாயே என இங்கிதமாக அன்பாக அழைப்பேன்.
9- எனது பெற்றோர் அறையில் இருக்கும் போது அனுமதிபெற்றே உள்ளே செல்வேன்.
10- பெற்றோரின் கையையும் தலையையும் முத்தமிடுதல்.

பதில் :1- தனது நெருங்கிய உறவுகளான சகோதரன் சகோதரி, தந்தையின் சகோதர சகோதரிகள், தாயின் சகோதர சகோதரிகள் மற்றும் ஏனைய உறவுகளை சந்திக்கச் செல்லுதல்.
2- பேச்சிலும் செயலிலும் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உதவி உபகாரம் புரிதல்.
3- அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல் என்பதில் அவர்களுடன் நவீன தொடர்புசாதனங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, அவர்களின் நிலமைகள் குறித்து விசாரிப்பதும் உள்ளடங்கும்.

பதில் : 1- நான் (அவர்களில்) நல்லோர்களை நேசித்து அவர்ககளுடன் தோழமை கொள்வேன்.
2- அவர்களில் தீயவர்களுடன் தோழமை கொள்வதை விட்டு விலகி நடப்பேன்.
3- எனது சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவதுடன் அவர்களை கைலாகு கொடுத்து வரவேற்பேன்.
4- அவர்கள் நோயுற்றிருந்தால் அவர்களை சுகம் விசாரித்து அவர்களின் சுகத்திற்காக பிரார்த்தனை செய்வேன்.
5- தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் எனக்கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் எனப்பதில் கூறுவேன். (அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கப்பிரார்திப்பேன்)
6- ஒரு சகோதர முஸ்லிம் அவரை சந்திக்க வருமாறு என்னை அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று அதற்கு பதிலளிப்பேன்.
7- தேவையான அறிவுரைகளை அவருக்கு வழங்குவேன்.
8- அவர் அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு உதவி செய்வதுடன் அந்த அநீதியிலிருந்து அவரைப் பாதுகாப்பேன்.
10- எனக்கு விரும்புவதை எனது சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவேன்.
11- எனது உதவி தேவைப்பட்டால் அவருக்கு உதவுவேன்.
12- எனது சொல்லாலோ செயலாலோ அவரை காயப்படுத்த மாட்டேன்.
13- அவரின் இரகசியங்களைப் பாதுகாப்பேன்.
14- அவரை ஏசவோ அவர் பற்றி புறம் பேசவோ தரக்குறைவாக கருதவோ பொறாமைக்கொள்ளவோ மாட்டேன். அது போல் அவரின் குறைகளை துருவி ஆய்வு செய்யவோ அவருக்கு துரோகம் இழைக்கவோ மாட்டேன்.

பதில் :1- சொல்லாலும் செயலாலும் அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்வேன். எனது உதவி அவருக்கு தேவைப்பட்டால் அவருக்கு உதவிசெய்வேன்.
2- பெருநாள் மற்றும் திருமணம் அல்லது இது போன்ற மகிழ்சியான சந்தர்ப்பங்களில் அவருக்கு வாழ்த்துவேன்.
3- அவர் சுகயீனமுற்றிருந்தால் நோய்விசாரிக்கச் செல்வேன். துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆர்தல் கூறுவேன்.
4- நான் சமைத்த உணவில் எனக்கு முடியுமானதை அவருக்கு வழங்குவேன்.
5- சொல்லாலோ, செயலாலோ அவர் அசௌகரியப்டும் விதத்தில் நடந்து கொள்ளமாட்டேன்.
6- மிக சப்தமாக பேசி அவரை தொந்தரவு செய்யமாட்டேன், அத்துடன் அவரின் குறைகளை துருவித்துருவி தேட மாட்டேன், அவரின் விடயத்தில் சகிப்புடன் நடந்து கொள்வேன்.

பதில் : 1- யார் என்னை விருந்துக்காக அழைக்கிறாரோ அவரின் அழைப்புக்கு பதிலளிப்பேன்.
2- நான் ஒருவரை சந்திக்க செல்வதாயின் அவரிடம் அனுமதி கேட்பதுடன் அதற்கான நேரத்தையும் கேட்பேன்.
3- வீட்டினுள் நுழைய முன் அனுமதி கேட்பேன்.
4- சந்திப்பதற்கான அனுமதி கிடைத்தால் தாமதிக்கமாட்டேன்.
5- சந்திக்கச் சென்றால் அவ்வீட்டார்களுக்கு அசௌகரியம் கொடுக்காதவாறு எனது பார்வையைத் தாழ்த்திக் கொள்வேன்.
6- எனது வீட்டிற்கு வரும் விருந்தாளியை இன்முகத்துடன் மிக அழகிய முறையில் மிகச்சிறந்த வரவேற்பு வாசகங்களைப் பயன்படுத்தி வரவேற்பேன்.
7- விருந்தாளியை மிகவும் அழகான இடத்தில் அமரவைப்பேன்.
8- உணவு மற்றும் பானம் போன்றவற்றை வழங்கி விருந்தாளியை நல்ல முறையில் கவனிப்பேன்.

பதில் : 1- நான் எனது உடம்பில் வலியை உணரும் வேளை அவ்விடத்தில் எனது வலது கையை வைத்து 'பிஸ்மில்லாஹ்' என்று மூன்று தடவைகள் கூறிவிட்டு ,((அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரி மா அஜிது வஉஹாதிரு)) என்ற துஆவை ஏழு (7) தடவைகள் ஓதுவேன்.
பொருள்:
அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அவனது வல்லமையையும் முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீங்கிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) அஞ்சுகின்ற தீங்கிலிருந்தும் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
2- அல்லாஹ் விதித்ததை திருப்தியோடு ஏற்று அதில் பொறுமையுடன் நடந்து கொள்வேன்.
3- எனது சகோதரன் நோயாளியாக இருந்தால் அவரை சுகம் விசாரிப்பதற்காக விரைந்து சென்று அவருக்காகப் பிரார்த்திப்பேன். (நேயாளியான எனது சகோதரருக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால்) அவரிடம் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கமாட்டேன்.
4- நோயாளியின் வேண்டுதல் இன்றி அவர் சுகம் பெற ஓதி ஊதுவேன் - ஓதிப்பார்ப்பேன்.
5- நோயாளிக்கு பொறுமையை கைகொள்ளுமாறும் பிரார்த்தனை செய்யுமாறும் அவரின் சக்திக்கு ஏற்ப தொழுது சுத்தமாக இருக்குமாறும் அவருக்கு உபதேசம் செய்வேன்.
6- நோயாளியைப் பார்க்க செல்பவர் நோயாளிக்கு ஓத வேண்டிய துஆ : (அஸ்அலுழ்ழாஹல் அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்பியக) என்று 7 தடவைகள் ஓதவேண்டும். துஆவின் பொருள் : மகத்துவமும் மாட்சிமையும் மிக்க அல்லாஹ்விடம் பிரமாண்டமான இறை சிம்மாசனத்தின் அதிபதியிடம் நான் உனக்கு ஆரோக்கியம் வழங்குமாறு வேண்டுகிறேன்.

பதில் : 1- அல்லாஹ்வுக்காக கற்கிறேன் என்ற தூய எண்ணம் (மனத்தூய்மை) இருத்தல் வேண்டும்.
2- நான் கற்ற அறிவைக்கொண்டு செயற்படுவேன்.
3- எனக்குக் கற்றுத்தந்த ஆசானை மதித்து நடப்பதுடன் அவர் இருக்கும் போதும் இல்லாத போதும் அவரை கண்ணியப்படுத்துவேன்.
4- அவருக்கு முன்னால் ஒழுக்கமாக உட்காருவேன்.
5- ஆசிரியர் கற்றுத் தரும்போது காது தாழ்த்திக் கேட்பேன், அவர் பாடத்தை கற்பிக்கும் வேளை இடையில் அவருக்கு குறுக்கீடு செய்யமாட்டேன்.
6- ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் போது ஒழுக்கமாக நடந்து கொள்வேன்.
7- அவரின் பெயரை கூறி அழைக்க மாட்டேன்.

பதில் : 1- சபையோருக்கு (அவையில் உள்ளோருக்கு) ஸலாம் கூறுவேன்.
2- சபையில் அமர்வதற்கு எங்கு இடம் கிடைக்கிறதோ அந்த இடத்தில் அமர்ந்து கொள்வேன். எவரையும் அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பமாட்டேன். அல்லது இருவருக்கு மத்தியில் உட்கார நாடினால் அவர்கள் இருவரிடமும் அனுமதியில்லாது உட்கார மாட்டேன்.
3- மற்றவர்களும் அமர வேண்டும் என்பதற்காக நான் உட்காரும்போது மற்றவர்களுக்கும் இடம்விட்டு உட்காருவேன்.
4- சபையில் நடைபெறும் உரையின் போது குறுக்கிட்டு பேச மாட்டேன்.
5- சபையிலிருந்து வெளியேற முன் அனுமதி பெற்று, சபையினருக்கு ஸலாம் கூறுவேன்.
6- சபையின் முடிவில் பின்வரும் கப்பாரதுல் மஜ்லிஸ் துஆவை ஓதுவேன். "ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த, அஸ்தஃபிருக வஅதூபு இலைக". பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீளுகிறேன்.

பதில்: 1- நேரகாலத்தோடு தூங்குவேன்.
2- வுழுச் செய்து சுத்தமான நிலையில் உறங்குவேன்.
3- நான் வயிற்றின் மீது (குப்புறப்படுத்து) உறங்க மாட்டேன்.
4- எனது வலப்புறமாக சாய்ந்து உறங்குவேன், வலது கையை வலது கண்ணத்தின் மீது வைத்து உறங்குவேன்.
5- எனது விரிப்பை உதறிக் கொள்வேன்.
6- தூங்கும் போது ஓதப்படும் துஆக்கள் மற்றும் திக்ருகளான ஆயதுல் குர்ஸியை ஒரு தடவையும், குல் ஸூறாக்களான ஸூறதுல் இக்லாஸையும் முஅவ்விததான் என்றழைக்கப்படும் ஸூறதுல் பலக் மற்றும் ஸூறதுன்னாஸ் ஆகிய ஸூறாக்களையும் மும்மூன்று தடவைகள் ஓதுவதுடன், பின்வரும் திக்ரையும் ஓதுவேன் : ((பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா)) பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன்.
7- ஸுப்ஹ் தொழுகைக்காக துயிலெழுவேன்.
8- தூக்கத்திலிருந்து எழுந்ததும் பின்வரும் திக்ரை ஓதுவேன் : (அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஷூர்) பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்பெற்று எழச்செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். மேலும் அவனிடமே (நமது) மீளுதல் உள்ளது.

பதில் :
1- உண்ணும் போதும் பருகும்போதும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கான ஊட்ட சக்தி கிடைக்கவேண்டும் என்று (நிய்யத்) மனதால் நினைத்துக் கொள்வேன்.
2- உண்ணுவதற்கு முன்பாக எனது இரு கைகளையும் கழுவிக்கொள்வேன்
3- 'பிஸ்மில்லாஹ்' என்று (அல்லாஹ்வின் திருநாமம்) கூறி எனது வலது கையால் உண்ண ஆரம்பிப்பேன். கூட்டாக சாப்பிடும் போது தட்டில் எனக்கு அருகாமையில் உள்ளதை சாப்பிடுவேன். தட்டின் நடுப்பகுதியிலிருந்தோ அல்லது எனக்கு எதிரில் உள்ளவரின் இடத்திலிருந்து எடுத்து சாப்பிட மாட்டேன்.
4- 'பிஸ்மில்லாஹ்' கூற மறந்து விட்டால் 'பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு' என்று கூறிக்கொள்வேன். (இதன் பொருள் : ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு (உணவு உட்கொள்கிறேன்)).
5- இருக்கும் உணவை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வேன், உணவை குறைகூற மாட்டேன். விரும்பினால் உண்ணுவேன் விரும்பாது விட்டால் குறைகூறாது விட்டுவிடுவேன்.
6- அதிகம் சாப்பிடாது எனக்கு போதுமான உணவின் சிறு கவளங்களை மாத்திரம் சாப்பிடுவேன்.
7- சூடான உணவு அல்லது பாணம் ஆகியவற்றில் சூட்டைத் தனிப்பதற்காக அதில் ஊதமாட்டேன். அதன் சூடு ஆறும் வரை விட்டுவிடுவேன்.
8- உணவு உட்கொள்ளும் போது எனது குடும்பத்தினர் அல்லது விருந்தாளியுடன் சேர்ந்து உண்ணுவேன்.
9- என்னை விட வயதில் மூத்தோர் சாப்பிடுவதற்காக என்னுடன் அமர்ந்திருந்தால் அவர்கள் சாப்பிட முன் ஆரம்பிக்கமாட்டேன்.
10- ஏதாவது ஒரு பானத்தை அருந்தும்போது "பிஸ்மில்லாஹ்" கூறி அமர்ந்த நிலையில், ஒரே மூச்சில் பருகாது மூன்று முறை மூச்சை நிறுத்தி நிறுத்தி அருந்துவேன்.
11- சாப்பிட்டு -குடித்து– முடிந்ததும் அல்லாஹ்வைப் புகழ்வேன். அதாவது 'அல்ஹம்து லில்லாஹ்' என்று கூறுவேன்.

பதில்: 1- எனது ஆடையை அணியும் போது அல்லாஹ்வை புகழ்ந்து வலப்பக்கத்திலிருந்து அணிவேன்.
2- கரண்டைக்குகீழால் நீழும் வகையில் எனது ஆடையை அணிய மாட்டேன்.
3- பெண் குழந்தைகளின் ஆடைகளை ஆண்குழந்தைகளுக்கோ ஆண்குழந்தைகளின் ஆடைகளை பெண்குழந்தைகளுக்கோ அணிவிக்கலாகாது.
4- எனது ஆடைகள் பிறமதத்தினருக்குரிய குறிப்பான ஆடைகள் அல்லது நாகரீம் என்ற பெயரில் புதுப்புது ஆடைகளை அணியும் நாகரீமற்றவர்களின் ஆடைகள் போன்றவைகளுக்கு ஒப்பாக ஆடைகள் அணியலாகாது.
5- ஆடைகளை களையும் போது "பிஸ்மில்லாஹ்" கூறி களைவேன்.
6- காலணியை அணியும் போது முதலில் வலதையும் களையும் போது இடது காலணியையும் முற்படுத்துவேன்.

பதில் : 1- 'பிஸ்மில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' என்று வாகனத்தில் ஏறும் போது கூறி அதில் அமர்ந்ததும் பின்வருமாறு கூறுவேன், (ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்) பொருள் : இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். (வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்). பொருள் : நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடம் திரும்பிச்செல்வோராக உள்ளோம். (ஸூறதுஸ் ஸுஹ்ருப் : 13,14)
2- நான் ஓரு முஸ்லிமை கடந்து சென்றால் அவருக்கு ஸலாம் கூறுவேன்.

பதில் : 1- பாதையில் நடக்கும் போது அதிவேகமாக நடக்காது பணிவோடு, நடையில் நடு நிலைபேணுவதுடன், பாதையின் வலது பக்கமாக நடந்து செல்வேன்.
2- பாதையில் செல்லும் போது சந்திக்கின்ற சகோதரர்களுக்கு ஸலாம் கூறுவேன்.
3- பாதையில் செல்லும் போது எனது பார்வையை தாழ்த்திக் கொள்வேன், எவருக்கும் தொந்தரவாக இடைஞ்சலாக நடந்து கொள்ள மாட்டேன்.
4- பாதையில் செல்லும் போது நன்மையை ஏவி தீமையை தடுத்தல் எனும் பணியை மேற்கொள்வேன்.
5- தொந்தரவும் இடைஞ்சலும் தரக்ககூடியவற்றை பாதையிலிருந்து அப்புறப்படுத்துவேன்.

பதில் : 1- வீட்டிலிருந்து வெளியேறும் போது வலது காலை முன்வைத்து வெளியேறுவேன், அப்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்வேன் : (பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய). இதன் பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்), என் காரியங்களை அல்லாஹ்வின் மீது முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ எனக்குக் கிடையாது, யா அல்லாஹ்! நான் வழி தவறிச் செல்வதில் இருந்தும், அல்லது (பிறரால்) நான் வழிகெடுக்கப்படுவதிலிருந்தும், நான் தவறுசெய்வதை விட்டும் அல்லது (பிறரால்) நான் தவறுக்கு உட்படுத்தப்படுவதைவிட்டும், நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும்; அல்லது (பிறரால்) நான் அநீதி இழைக்கப்படுவதை விட்டும், நான் அறிவீனமாக நடந்துகொள்வதைவிட்டும் அல்லது (பிறர்) என்மீது அறிவீனமாக நடந்துகொள்வதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். 2- வீட்டினுள் நுழையும் வலது காலை வைத்து நுழைவேன் அவ்வேளை பின்வரும் திக்ரை ஓதுவேன் : (பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலா ரப்பினா தவக்கல்னா). பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம்.மேலும் எங்கள் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம்.
3- வீட்டினுள் நுழைய முன் மிஸ்வாக் செய்துகொள்வேன், பின் குடும்பத்தாருக்கு ஸலாம் கூறுவேன்.

பதில் : 1- கழிவறையினுள் நுழையும் போது இடது காலை முன்வைத்து நுழைவேன்.
கழிவறையினுள் நுழைய முன் பின்வரும் துஆவை ஓதுவேன் :
(பிஸ்மில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ
அஊது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்)
பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (நான் நுழைகிறேன்) யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
3- அல்லாஹ்வின் திருநாமம் உள்ள பொருட்களை கழிவறையின் உள்ளே எடுத்துச் செல்ல மாட்டேன்.
4- (மலசலம் கழிக்கும் போது) இயற்கைத் தேவையை நிறைவேற்றும் போது என்னை மறைத்துக் கொள்வேன்.
5- கழிவறையில் யாருடனும் கதைக்க மாட்டேன்.
6- கழிவறையில் மலசலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ உட்காரமாட்டேன்.
7- மலசலம் கழித்தபின் சுத்தம் செய்வதற்கு வலக்கரத்தை பயன்படுத்தாது இடக்கரத்தைப் பயன்படுத்துவேன்.
8- மனிதர்கள் செல்லும் பாதை ஓரங்களிலும், நிழல் தரும் இடங்களிலும் எனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற மாட்டேன்.
9- மலசலம் கழித்து சுத்தம் செய்த பின் எனது கையை கழுவிக்கொள்வேன்.
10- கழிவறையிலிருந்து வெளியே வரும் போது இடது காலை முன்வைத்து 'குப்ரானக' என்ற திக்ரை ஒதுவேன். பொருள் : யா அல்லாஹ் ! என்னை நீ மன்னிப்பாயாக!

பதில்: 1- பள்ளிக்குள் நுழையும் போது எனது வலது காலை முன்வைத்து பின்வரும் துஆவை ஓதியவனாக உட்செல்வேன் : பிஸ்மில்லாஹி, அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரினால் (மஸ்ஜிதில் நுழைகிறேன்) யா அல்லாஹ்! உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்துவிடுவாயாக!.
2- பள்ளிக்குள் நுழைந்ததும் தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக்கான காணிக்கை தொழுகை) இரண்டு ரக்அத்துக்களை தொழாத வரை உட்காரமாட்டேன்.
3- தொழுவோருக்கு முன் நடந்து செல்ல மாட்டேன். அல்லது காணமல் போன பொருளென்றை தேடுவதற்காக பள்ளியில் அறிவிப்புச் செய்யமாட்டேன். பள்ளியினுள் கொடுக்கல் வாங்கல் போன்ற வியாபார நடவடிககைகளில் ஈடுபட மாட்டேன்.
4- இடது காலை முன்வைத்து பள்ளியிலிருந்து பின்வரும் துஆவை ஓதியவனாக வெளியேறுவேன் : அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக', பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளை வேண்டுகிறேன்.

பதில் :1- நான் ஒரு முஸ்லிமை சந்திக்கும் வேளையில் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு) என்று கூறுவேன். பொருள் : உங்கள் மீது அல்லாஹ்வின் ஈடேற்றமும்- அவனின் கருணையும் அருள்வளமும் கிட்டட்டுமாக! ஸலாம் அல்லாத வேறு முகமன்களை கூற மாட்டேன். அதே போல் ஸலாத்திற்குப் பதிலாக எனது கையால் மாத்திரம் சைக்கினை செய்யவும் மாட்டேன்.
2- நான் யாருக்கு ஸலாம் கூறுகிறேனோ அவரின் முகத்தை முகமலர்ச்சியோடு பார்த்து புன்முறுவல் பூப்பேன்.
3- சந்திப்பவருக்கு வலது கையால் கைலாகு கொடுப்பேன்.
4- எனக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தால் அவருக்கு அதைவிட மிக நல்ல முறையில் வாழ்த்துத் தெரிவிப்பேன், அல்லது அவர் வாழ்த்தியது போன்று வாழ்த்துத்துவேன்.
5- முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்வதை தவிர்ந்து கொள்வேன். அவ்வாறு அவர் ஸலாம் கூறினால் அதே போன்று பதில் கூறுவேன்.
6- சிறியோர் மூத்தோருக்கும், வாகனத்தில் செல்வோர் நடந்து செல்பருக்கும், நடந்து செல்பவர் உட்கார்ந்து இருப்பவருக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கும் ஸலாம் கூற வேண்டும்.

பதில் :1- ஒரு இடத்திற்குள் நுழைய முன் நான் அனுமதி கேட்டு நுழைவேன்.
2- ஒரு இடத்தினுள் நுழைவதற்கு மூன்று தடவைகள் அனுமதி கோருவேன். அதைவிட அதிகரிக்கமாட்டேன். அனுமதி கிடைக்காத பட்சத்தில் திரும்பி விடுவேன்.
3- அனுமதி கேட்டு கதவை மெதுவாகத் தட்டுவேன். அப்போது கதவுக்கு நேராக நிற்காது கதவின் வலது பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ நின்று கொள்வேன்.
4- எனது தாயும் தந்தையும் அல்லது அவர்களில் எவராவது ஒருவர் அறையினுள் இருக்கும் போது அவர்களிடம் அனுமதி பெற முன் அவர்களின் அறையினுள் நுழைய மாட்டேன். குறிப்பாக ஸுப்ஹ் தொழுகைக்கு முன், லுகருக்கு முன்னுள்ள நேரம், இஷாவிற்குப் பின் ஆகிய வேளைகளில் அவர்களிடம் அனுமதி பெற முன் அவர்களின் அறையினுள் நுழைய மாட்டேன்.
5- குடியமர்த்தப்படாத பொது மருத்துவ நிலையங்கள் வியாபாரஸ்தளங்கள் போன்ற இடங்களில அனுமதியுமின்றி நுழையலாம்.

பதில் :1- விலங்கினங்களுக்கு உணவு கொடுத்து நீர் புகட்டுவேன்.
2- அவைகளுடன் அன்பாகவும் பரிவோடும் நடந்து கொள்வேன். அவைகளின் சக்திக்கு அப்பாற்பட்ட சுமைகளை அவற்றின் மீது சுமத்த மாட்டேன்.
3- விலங்கினங்களுக்கு அடித்து தொந்தரவு செய்யவோ துன்புறுத்தவோ மாட்டேன்.

பதில் : 1- விளையாடுவதின் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலை சக்தியை பெற்றுக்கொள்ள வேண்டும் என நிய்யத் வைத்துக் கொள்வேன்.
2- தொழுகை நேரத்தில் விளையாடமாட்டோம்.
3- ஆண்பிள்ளைகள் பெண் பிள்ளளைகளுடன் சேர்ந்து விளையாடுதல் கூடாது.
4- விளையாடும் போது எனது அவ்ரத்தை –கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி- மறைக்கும் விளையாட்டு சீருடைகளை அணிந்து கொள்வேன்.
5- முகத்தை தாக்குதல், வெட்கத்தளங்கள் வெளியே தெரிபடுதல் போன்ற ஹராமான –தடைசெய்யப்பட்ட –விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்வேன்.

பதில்: 1- நகைச்சுவையில் உண்மையை கடைப்பிடித்தல், பொய்யானவற்றை தவிர்ந்து கொள்ளல்.
2- நகைச்சுவை என்பது கேலி செய்தல், கிண்டலடித்தல்,தொந்தரவு செய்தல், மிரட்டல் ஆகியவை அற்றதாக இருக்க வேண்டும்.
3- எல்லை மீறி அதிகமாக நகைச்சுவையில் ஈடுபடக் கூடாது.

பதில் : 1- தும்மும் போது கை அல்லது துணி அல்லது கைக்குட்டையை வைத்து மூகத்தை மூடிக் கொள்ளுதல்.
2- தும்மியதன் பின் (அல்ஹம்துலில்லாஹ்), (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.
3- அதற்கு அதனை கேட்ட சகோதரன் அல்லது நண்பர் (யர்ஹமுகல்லாஹ்), (அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!) என்று கூற வேண்டும்.
அதற்கு தும்மியவர் (யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்), (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக! உங்கள் நிலமைகளை சீராக்குவானாக!) என்று கூற வேண்டும்.

பதில் : 1- கொட்டாவி வருகின்ற வேலை முடியுமானவரை தடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
2- 'ஹா' 'ஹா' என்று சம்பதமிடக் கூடாது.
3- கையை வாயில் வைத்து மறைத்துக் கொள்ளல் வேண்டும்.

பதில் : 1- அல்குர்ஆனை வுழூச்செய்த பின் சுத்தமான நிலையில் ஓதுதல்.
2- கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் உட்கார்ந்து ஓதுதல்.
3- அல்குர்ஆனை ஒதுவதற்கு ஆரம்பிக்கும் போது أعوذ بالله من الشيطان الرجيم என்று ஓதி ஷைத்தானைவிட்டும் பாதுகாப்புத் தேடிக் கொள்வேன்.
4- ஓதிய வசனங்கள் குறித்து சிந்திப்பேன்.