நபி (ஸல்) அவர்களின் வரலாற்றுப் பிரிவு

பதில் : எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வின் மகனாவார்,அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனவார், அப்துல் முத்தலிப் அவர்கள் ஹாஷிமின் மகனாவார். ஹாஷிம் அவர்கள் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவர். குறைஷிகள் அரபிகளாவர். அரபிகள் இப்ராஹீம் நபியின் மகனான இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்தோராவர். அவர்களின் மீதும் எங்கள் நபி மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.

பதில் : நபியவர்கள் தாயின் கருவரையில் இருக்கும்போது மதீனாவில் அவர்களின் தந்தை மரணித்துவிட்டார்.

பதில்- யானை வருடம் ரபீஉனில் அவ்வல் மாதம் திங்கட் கிழமை.

பதில் : - நபியவர்களின் தந்தையின் அடிமை பெண்ணான உம்மு அய்மன்.
- நபியவர்களின் பெரிய தந்தையான அபூலஹபின் அடிமை ஸுவைபா.
- ஹலிமதுத் ஸஃதியா.

பதில்- நபியவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது அவர்களின் தாயார் மரணமடைந்தார்கள். பின்னர் நபியவர்களை அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

பதில்: நபியவர்களின் எட்டாது வயதில்; பாட்டனார் அப்துல் முத்தலிப் மரணமடைந்ததைத் தொடர்;ந்து அன்னாரின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்தார்கள்.

பதில் - நபிவர்களின் (12) பன்னிரண்டாவது வயதில் தனது சிறிய தந்தையுடன் ஷாமுக்குச் சென்றார்கள்.

பதில் - கதீஜா (ரழி) அவர்களின் வியாபாரப்பொருட்களை விற்பனை செய்யவே இரண்டாவது தடவையாக சிரியாவுக்குச் சென்றார்கள். நபியவர்கள் அப்பயணத்திலிருந்து திரும்பி வந்ததும் அன்னை கதீஜா (ரழி) அவர்களை திருமனம் செய்துகொண்டார்கள். அப்போது அவர்களின் வயது இருபத்தைந்தாகும்.

பதில் - நபியவர்களின் (35) முப்பத்தைந்தாவது வயதில் குறைஷிகள் கஃபாவை புணர்நிர்மானம் செய்தார்கள்.
இக்கட்டுமானப் பணியின் போது ஹஜருல் அஸ்வத் கல்லை உரிய இடத்தில் யார் வைப்பது என்ற சர்ச்சை ஏற்பட்டபோது குறைஷிகள் நபியவர்களை மத்தியஸ்தராக நியமித்தனர். நபியவர்கள் அக்கல்லை ஒரு பிடவையில் வைத்து அப்பிடவையின் ஒரப் பகுதியை ஒவ்வொரு கோத்திரத் தலைவர்களும் பிடிக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள் நான்கு கோத்திரத்தினராக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஹஜருல் அஸ்வத் கல் வைக்கப்படும் இடத்திற்கு உயர்த்தியபோது நபியவர்கள் தனது கையால் அதனை எடுத்து வைத்தார்கள்.

பதில் : நபியவர்கள் இறைதூதராக அனுப்பப்பட்டபோது அவர்களுக்கு வயது நாற்பதாகும், அவர்கள் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் நன்மாராயம் கூறக்கூடியவர்களாகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும் அனுப்பப்பட்டார்கள்.

பதில்- தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவின் மூலம் கிடைத்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது காலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.

பதில் : நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடக் கூடியவர்களாக இருந்தார்கள். அதற்குத் தேவையான கட்டுச்சாதனங்களை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள்.
நபியவர்கள் ஹிராக் குகையில் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு வஹி -இறைச்செய்தி- இறங்கியது.

பதில் :ஸூறதுல் அலகின் முதல் ஐந்து வசனங்களே நபியவர்களுக்கு முதலாவது இறங்கிய இறைவசனங்களாகும்: "இக்ரஃபிஸ்மி ரப்பிகல்லதீ கலக்".((யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக). "கலகல் இன்ஸான மின் அலக்" (அவன் மனிதனை கருவறை சுவரில் ஒட்டிக்கொள்ளக்கூடியதிலிருந்து படைத்தான்). "இக்ரஃ வரப்புகல் அக்ரம்" (நீர் ஓதுவீராக ! உமது இரட்சகன் மிகவும் கண்ணியமானவன்). "அல்லதீ அல்லம பில் கலம்" (அவன் எழுது கோள் கொண்டு கற்றுக் கொடுத்தான்). "அல்லமல் இன்ஸான மாலம் யஃலம்" (மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்). (ஸூறத்துல் அலக் 1-5).

பதில் : ஆண்களில் : அபூபக்கர் அஸ்ஸித்தீக் (ரழி), பெண்களில் : கதீஜா பின்த் குவைலித் (ரழி), சிறுவர்களில்: அலி இப்னு அபீ தாலிப் (ரழி), உரிமையிடப்பட்ட அடிமைகளில் ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி), அடிமைகளில் : பிலால் அல் ஹபஷி ரழியல்லாஹு அன்ஹும் போன்றோர் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டோராவர்.

பதில் : மூன்று வருடங்கள் பிரச்சார நடவடிக்கை இரகசியமாக இருந்தது. பின்னர் பகிரங்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுபடுமாறு நபியவர்களுக்கு இறை கட்டளை பிரப்பிக்கப்பட்டது.

பதில் : இணைவைப்பாளர்கள் நபியவர்களையும்; முஸ்லிம்களையும்; மிகவும் துன்புறுத்தினர். அதனால் நபியவர்கள் அபீஸீனியா மன்னனான நஜாஷியிடம் ஹிஜ்ரத் செல்ல முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
இணைவைப்பாளர்களான முஷ்ரிகுகள் நபியவர்களை துன்புறுத்தி கொலை செய்வதற்கு ஒன்றுபட்ட வேளை அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான். தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நபியவர்கள் தனது சிறிய தந்தையை அனுகினார்கள்.

பதில் : இவ்வருடத்தில் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபும் அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்களும் மரணித்தார்கள்.

பதில்- நபியவர்களின் ஐம்பதாவது வயதில் இடம் பெற்றது. அந்நிகழ்வின் போது ஐவேளைத் தொழுகை அவர்களின் மீது கடமையாக்கப்பட்டது.
அல் இஸ்ராஉ என்பது மக்காவில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு சென்றதைக் குறிக்கும்.
அல் மிஃராஜ் என்பது அல்மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகத்திற்கும் அங்கு ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரையிலும் சென்றதைக் குறிக்கும்.

பதில் :நபியர்வர்கள் தாஇப் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார்கள். பருவகாலங்களிலும் மக்கள் ஒன்று கூடுமிடங்களிலும் தன்னை முன்னிருத்திப் பிரச்சாரம் செய்தார்கள். இவ்வேளை மதீனாவைச் சேர்ந்த அன்ஸாரிகளில் சிலர் அவர்களை ஏற்றுக்கொண்டு (ஈமான் கொண்டு) அவர்களுக்கு உதவி செய்வதாக சத்தியப்பிரமானம் செய்தார்கள்.

பதில் : மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.

பதில் : ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத், அதான் மற்றும் இஸ்லாத்தின் ஏனைய சட்டதிட்டங்கள் விதியாக்கப்பட்டன.

பதில் - பெரிய பத்ர் யுத்தம்.
உஹுத் யுத்தம்.
அஹ்ஸாப் யுத்தம்.
மக்காவை வெற்றிக்கொள்வதற்கான போர்.

பதில் : பின்வரும் வசனம் : "நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படும் அந்த நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டாது". (ஸூறதுல் பகரா :281)

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி (11) பதினொராவது வருடம் ரபீஉனில் அவ்வல் மாதம் மரணித்தார்கள். அப்போது அவர்களின் வயது (63) அறுபத்து மூன்றாகும்.

பதில் : 1- கதீஜா பின்த் குவைலிது (ரழியல்லாஹு அன்ஹா).
2- சவ்தா பின்த் ஸம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா).
3-ஆயிஷா பின்த் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹா).
4- ஹஃப்ஸா பின்த் உமர் (ரழியல்லாஹு அன்ஹா).
5- ஸைனப் பின்த் குஸைமா (ரழியல்லாஹு அன்ஹா).
6- உம்மு ஸலமா ஹின்த் பின்த் அபீ உமைய்யா (ரழியல்லாஹு அன்ஹா).
7- உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபீஸுப்யான் (ரழியல்லாஹு அன்ஹா).
8- ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹா).
9- மய்மூனா பின்த் அல்ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹா).
10- ஸஃபிய்யா பின்த் ஹுயைய் (ரழியல்லாஹு அன்ஹா).
11- ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா).

பதில் : ஆண் குழந்தைகள் மூவர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :
அல் காஸிம், நபியவர்கள் இவரின் பெயரைக் கொண்டே புனைப்பெயர் சூட்டி அழைக்கப்பட்டார்கள் .(அபுல் காஸிம்).
அப்துல்லாஹ்.
இப்ராஹீம்.
பெண்பிள்ளைகளில் :

பாத்திமா.
ருகைய்யா.
உம்மு குல்ஸூம்.
ஸைனப் ஆகியோர்களாவர்.
இப்ராஹீமைத் தவிர மற்ற அனைத்துப் பிள்ளைகளும் கதீஜா (ரழி) அவர்களின் மூலம் கிடைத்த பிள்ளைகளாகும். பாத்திமா (ரழி) அவர்களைத் தவிர ஏனைய அனைத்துப் பிள்ளைகளும் நபியவர்களுக்கு முன்னரே மரணித்துவிட்டார்கள். அவர்கள் நபியவர்கள் மரணித்து 6 ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.

பதில் : நபி (ஸல்) அவர்கள் அதிகம் குட்டயராகவோ அதிகம் உயரம் கொண்டவராகவோ இருக்கவில்லை, மாறாக நடுத்தர உயரமுடயவராகவும், சிவப்பு நிற சாயல் கொண்ட வெள்ளை நிற மேனியை உடைவராகவும் இருந்தார். அத்துடன் அடர்ந்த தாடியும், அகலமான இருகண்களும், பெரிய வாயையும் உடயவராகவும் காணப்பட்டாரகள். அவர்களின் முடி மிகவும் கருமையானதாக இருந்தது, அத்துடன் அழகான அகன்ற இரு புயங்களையும் நறுமனம் கொண்டவராகவும் காணப்பட்டார். இவை அல்லாத அவர்களின் அழகான தோற்றம் குறித்த பல விடயங்கள் உள்ளன.

பதில் : நபி (ஸல்) தனது சமூகத்தை மிகவும் தெளிவான ஒரு பாதையில் விட்டுவிட்டுச் சென்றார்கள். அதன் இரவோ பகல் போன்று பிரகாசமாக உள்ளது. அதனை மனமுரண்டாக புறக்கணித்து நடந்தவன் தவிர வேறு எவரும் நெறிதவரி வழிதவறமாட்டான். எந்த ஒரு நன்மையான நல்ல காரியமாக இருந்தாலும் அதனை காட்டித்தராமலோ, எந்த ஒரு தீமையான காரியமாக இருந்தாலும் அது குறித்து எச்சரிக்கை செய்யாமலோ இந்த சமூகத்தை அவர்கள் விட்டுச்செல்லவில்லை.